ஹோமாகமயில் பிக்குமார் “காட்டு தர்பார்” – புத்திஜீவிகள் கடும் கண்டனம்
ஹோமாகம நீதிமன்ற அருகில் பிக்குமார் கலகம் புரிந்து சட்டத்தை அவமதித்ததைக் கண்டித்து சட்டத்துறை அறிஞர்கள், புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். பொதுவில் இந்தச் செயற்பாடு பௌத்த பிக்குமார்கள் அனைவருக்கும் அபகீர்த்தி விளைவிக்கும் ஒரு விடயமாகி விட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கொழும்பு முன்னாள் பிரதம மஜிஸ்ரேட்டும், நீதிச்சேவை அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் பிரதம செயலாளருமான ஜீ.டீ. குலதிலக்க கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் சட்டத்தை நீதிமன்றம் அமுலாக்கும் போது அதற்கு தடை ஏற்படுத்தி ஆஜராகும்…
