ஹெரோயின் கடத்தல் முறியடிப்பு
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படவிருந்த ஹெரோய்ன் கடத்தல் முயற்சிமுறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சுங்க அதிகாரிகள் இந்த ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் வைத்து இந்த போதைப்பொருள் தொகை நேற்றுமீட்கப்பட்டுள்ளது. இதன்போது பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 3.4 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திய மூன்று பாகிஸ்தானியர்கள்கடந்த வாரத்தில் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
