Headlines

ஹிருணிகா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இனந்தெரியாத நபர் ஒருவரை கடத்தியமை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகாவின் வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கின் முன்னேற்றமான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகா உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கிற்காக சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த…

Read More

மஹிந்த நல்லவர்: ஹிருணிகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்லவர் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் நேற்று (13) பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யார் அழுதாலும் யார் தேங்காய் உடைத்தாலும் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே ஆட்சி செய்வார். இந்த அரசாங்கம் பல…

Read More

ஹிருணிகா பிணை பெறுவதில் கின்னஸ் சாதனை

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறுகிய கால இடைவௌியில் பினையில் விடுவிக்கப்பட்டமையானது, புதிய கின்னஸ் சாதனை என, உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். “ஹிருணிகா விரைவாக சிறை சென்று விரைவாக வௌியே வருவார்” என தான் முன்னரே கூறியதாகவும், அது தற்போது நடைபெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பேராசிரியர் நாலக கோடஹேன பல நாட்களாக சிறையில் இருக்கையில், ஹிருணிகா குறுகிய காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டமை கின்னஸ் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (11)…

Read More

ஹிருணிகாவை குறித்து பொலிஸார் அறிவிக்கவில்லை: சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் இதுவரையில் தமக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஹிருணிகா பிரேமசந்திர தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர். அண்மையில் தெமட்டகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் ஹிருணிகாவை கைது செய்ய வேண்டிய தேவை குறித்து இதுவரையில் அறிவிக்கவில்லை. பொலிஸார் முழு அளவிலான சுயாதீனத்தன்மையுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவார்கள்…

Read More