Headlines

வெசாக்கை முன்னிட்டு தலைகள் வெளியீடு

வெசாக் தினத்தை முன்னிட்டு 3 விசேட தபால் தலைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெவ்வேறு வகையான மூன்று தூபிகள் அம்முத்திரைகளில்  பிரசுரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முன்மொழிவுகளை பௌத்த சாசன அமைச்சு முன் வைத்துள்ளது. இது தொடாபான கலந்துரையாடலில் தபால்துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, உள்நாட்டமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்து கொண்டதாக தபால் துறை அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More

சர்வதேச விடுமுறையாகும் வெசாக் பௌர்ணமி தினம்!

இலங்கையில் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான தினங்களில் ஒன்றாக கருதப்படும் வெசாக் பௌர்ணமி தினம், சர்வதேச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் விடுமுறை தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் விடுமுறை தினமாக ஏற்றுக்கொள்ளபபட்டுள்ளது. அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 193 உறுப்பு நாடுகளும் கூடிய போது, வெசாக் பௌர்ணமி தினத்தை விடுமுறையாக அறிவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தீபாவளி பண்டிகை, பெரிய…

Read More