விமானப்படை வீரர்களுக்கு முகப்புத்தக பாவனைக்கு தடை?
விமானப்படை தளபதி சுகத் புளத் சிங்களவின் உத்தரவுக்கு அமைய விமானப்படை நிர்வாக இயக்குனர் இதற்கான அறிவுறுத்தலை விமானப்படை வீரர்களுக்கு வழங்கியுள்ளார். அதன்படி சுமார் 4000 விமானப்படை வீர வீராங்கனைகள் தமது முகப் புத்தகத்தை பயன்படுத்தும் உரிமையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் தற்போது விமானப்படை வீரர்களும் அதிகாரிகளும் பயன்படுத்திவரும் முகப்புத்தக கணக்குகளையும் அவர்கள் மூட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக விமானப்படை வீரர்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே இவ்வாறு முகப் புத்தக தடை அமுல் செய்யப்பட்டுள்ளதாக…
