Headlines

சிகிரியா வருமானம் அதிகரிப்பு

சிகிரியாவைப் பார்வையிட வரும் உல்லாசப் பிரயாணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனால் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஆறரைக் கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய கலாசார நிலையத்துக்கு சொந்தமான சிகிரிய திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் சிகிரியாவுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 150,000 இனைத் தாண்டியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 34 சதவீத அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Read More

கடந்த ஆண்டு அரசுக்கு 47.5 மில்லியன் வருவாய்

யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் கடந்த ஆண்டு அரசிற்கு கிடைத்த வருமானம் 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் மட்டும் கடந்த ஆண்டில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறல், புதுப்பித்தல் நடவடிக்கைகள் மூலம் அரசிற்கு கிடைத்த வருமானத்தின் தொகை 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம் மாதம் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 35…

Read More