Headlines

இன்றும் மழை பெய்யும்

இன்றைய தினமும் (29) நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றம் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Read More

இலங்­கையில் 22,254 தமிழ் பெளத்­தர்கள்

இலங்­கையில் 22254 தமிழ் பெளத்­தர்கள் உள்­ளனர். இவர்­களில் வடக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த 470 தமிழ் பெளத்­தர்­களும் அடங்­கு­கின்­றனர் என புத்­த­சா­சன அமைச்சு தெரி­வித்­தது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல கேள்­விக்­கான விடை­ய­ளிக்கும் நேரத்­தின்­போது ஐ.தே.கட்சி.எம்.பி. புத்­திக பத்­தி­ரணவின் கேள்­விக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட பதி­லி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. புத்­த­சா­சன அமைச்சின் பதிலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குடி­சன மதிப்­பீட்டுத் திணைக்­கத்­தினால் 2012 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­கெ­டுப்­பிற்கு அமைய 22254 தமிழ் பெளத்­தர்கள் உள்­ளனர். மேற்­கூ­றப்­பட்ட கணக்­கெ­டுப்­பிற்கு அமைய வடக்கு…

Read More

வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத சேவைகளில் மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று  தெரிவித்துள்ளது. அதன்படி புதிய நேர அட்டவணைகள் வருமாறு, கொழும்பு யாழ்பாணம் இடையில் சேவையில் உள்ள யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து காலை 05.50 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த புகையிரதம் பிற்பகல் 02.37 இற்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதுடன், பிற்பகல் 03.20 ற்கு காங்கேசன்துறையை சென்றடையவுள்ளது. யாழ்தேவி யாழ்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி…

Read More

வடக்கு புகையிரத பாதைகளில் குறைபாடுகள்: கொடுப்பனவுகள் இடைநிறுத்தம்

– ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம் – வடக்கு புகையிரதபாதை அமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சு பாரிய கடன் சுமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை எவ்வாறு செலுத்த போகின்றோம் என்ற சவால்களுடன் பயணத்தை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார். இன்று புதன்கிழமை பாராளுமன்றில் கடற்றொழில் நீர்வளத்துறை போக்குவரத்து சிவில் விமான மற்றும் கப்பற்துறை அமைச்சர்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு…

Read More