Headlines

இரண்டு வருடங்களுக்குள் 60 பல்கலைக்கழக விடுதிகள்!

இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விடுதிப் பற்றாக்குறை பிரச்சினை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் தீர்த்து வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்குள் 60 பல்கலைக்கழக விடுதிகள் அமைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அழகியல்கலைப் பீடம் மற்றும் சுதேச வைத்தியத்துறை பீடங்களுக்கான இரண்டு புதிய விடுதிகள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (25)  நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.!

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மேலும் நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குவதற்குவதாகவும் மற்றும் சீன நிறுவனம்  உள்நாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனவும், கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்படும் காணிகளுக்கு சந்தை பெறுமதிக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Read More