ரொஹான் வெலிவிட்டவிடம் சி.ஐ.டி 5 மணி நேர விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படங்களுடன் கூடிய 4 ஆயிரம் ஒளிநாடாக்களை அலரிமாளிகையிலிருந்து இரகசியமாக அப்புறப்படுத்தியமை தொடர்பாக அவரது ஊடகப் பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட மீது கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் அழைக்கப்பட்டு சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 9ம் திகதி ஆகும் போது இந்த ஒளிநாடாக்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக…
