தமது புகைப்பட பேனர்கள் அகற்றுமாறு பிரதமர் உத்தரவு
தமது புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள், பதாகைகள், கட்அவுட்களை அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். மே தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பல பகுதிகளிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படம் அடங்கிய பேனர்கள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த அனைத்து பேனர்கள், கட்அவுட்களையும் அகற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். மே தினமன்று பிரதமரின் புகைப்படம் அடங்கிய பதாகைகள் பேனர்கள் ஆயிரக்கணக்கில் கட்சி ஆதரவாளர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது….
