Headlines

தமது புகைப்பட பேனர்கள் அகற்றுமாறு பிரதமர் உத்தரவு

தமது புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள், பதாகைகள், கட்அவுட்களை அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். மே தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பல பகுதிகளிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படம் அடங்கிய பேனர்கள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த அனைத்து பேனர்கள், கட்அவுட்களையும் அகற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். மே தினமன்று பிரதமரின் புகைப்படம் அடங்கிய பதாகைகள் பேனர்கள் ஆயிரக்கணக்கில் கட்சி ஆதரவாளர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது….

Read More

மஹிந்தவிற்கு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியாது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட முடியாத இராணுவப் பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்க முடியாது என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

மஹிந்தவால் தான் ஆட்சிக்கு வந்தோம், அவரை பாதுகாப்பது எமது கடமை : சபையில் பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். எனவே அவரை பாதுகாக்க  வேண்டியது எமது கடப்பாடாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  சபையில்  தெரிவித்தார். உலகில்  எந்தவொரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும்  இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.  ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின்  பாதுகாப்பு தொடர்பில் பேச்சு நடத்த அரசு தயார் என்றும் பிரதமர் சபையில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி.,  முன்னாள்   ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  இராணுவப் பாதுகாப்பு  நீக்கப்பட்டது தொடர்பில் பிரதமரிடம்…

Read More

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படும்: பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எதிர்பார்த்த மக்கள் ஜனநாயகத்தை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ரணசிங்க பிரேமதாசவின் 23 வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கட்சிக்குள் கட்சியை திருத்தி அமைக்க முடியும். சிலர் இனவாதத்தை பரப்ப முயற்சித்து வருகின்றனர். ஜனாதிபதி பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால், நல்லாட்சிக்கு தனது கூடியளவு ஒத்துழைப்புகளை வழங்கியிருப்பார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ரணில் – சம்பந்தன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் இன்று (27) புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, கிளிநொச்சியில் மக்கள் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில், பிரதமரிடம் அவர் முறையிட்டுள்ளார்.

Read More

ரணில் தலைமையில் உயர்மட்ட குழு மே மாதம் இந்தியா பயணம்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் மே மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்லும் அரசாங்கத்தின் உயர் மட்ட குழுவில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் இடம்பெறுகின்றார். துறைமுக நகர் விவகாரம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னரான சூழ்நிலை என்பவை இந்த விஜயத்தில் முக்கிய விடயங்களாக இந்தியா கவனத்தில் கொள்ளவுள்ளது. கடன்களுக்காக பங்குகளை விற்பணை செய்வதற்கான…

Read More

முஸ்லிம் நாடுகளுடன் ரணில் ஒப்பந்தம்

சீன விஜயத்தின்போது பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை, இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிடைத்த நன்கொடை,  நான்கு துறைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் என்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தல், ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குதல், அபிவிருத்தி நோக்கிப் பயணித்தல் ஆகியவற்றை பிரதான கருப்பொருட்களாகக் கொண்டே அரசாங்கம் பயணிக்கின்றது என்றும் அவர் சொன்னார். சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் நடத்திய…

Read More

சீனாவை சென்றடைந்தார் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் நேற்று சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன வெளிவிவகார துணை அமைச்சர் கொங் சூவான் யூ மற்றும் சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு ஆகியோர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரை பெய்ஜிங் கெப்பிட்டல் சர்வதேச விமான…

Read More

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாரம் மேற்­கொள்­ள­வுள்ள சீன விஜ­யத்தின் போது இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையை உரு­வாக்­கு­வது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வுள்ளார். அது­மட்­டு­மன்றி பல்­வேறு உடன்­ப­டிக்­கை­களும் இந்த விஜ­யத்தின் போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. முத­லீ­டு­களை ஊக்­கு­வித்தல், பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப கூட்­டு­றவு சிறு­நீ­ரக நட­மாடும் சேவை, விளை­யாட்டு கூட்­டு­றவு சுற்­று­லாத்­து­றையை ஊக்­கு­வித்தல், தெற்கு அதி­வேக பாதைக்­கான இரண்டாம் கட்ட அபி­வி­ருத்தி கம்­பஹா அத்­த­ன­கல்ல, மினு­வங்­கொடப் பகு­தி­க­ளுக்­கான நீர்­வ­ழங்கல் கடன் உடன்­ப­டிக்கை போன்­றன கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எதிர்­வரும் புதன்­கி­ழமை…

Read More

ஒன்லைன் மூலம் தெரிவியுங்கள்

நல்லிணக்க பங்காளர்கள், நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கருத்துக்களை ஒன்லைனில் சமர்பிப்பதற்காக நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை வழங்கும் விஷேட செயலணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. காணாமற் போனோர் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்-நிகழாமைக்கான ஆணைக்குழு, சட்டப் பொறிமுறைகள், இழப்பீட்டிற்கான அலுவலகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக நல்லிணக்க பொறிமுறைகளை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கருத்துக்களை சமர்ப்பிக்க்கும் வகையில் இவ் ஆலோசனை கோரல் செயன்முறை இணையத்தளத்திற்கான சமர்ப்பணப் படிவத்தினை மும்மொழிகளிலும்…

Read More

அவசரமாகக் கூடுகிறது பொருளாதாரக் குழு!

அரசாங்கத்தின் பொருளாதாரக் குழு அவசரமாக இன்று (16) கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவில் மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் அங்கம் வகிக்காத  நிலையிலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தடை உள்ளிட்ட நெருக்கடிகள் குறித்து ஆராயும் நோக்கில், மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோருக்கும்  பொருளாதாரக் குழு அழைப்பு…

Read More

2019இல் புதிய கல்வி முறை: பிரதமர்

கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின், பயிற்றப்பட்ட ஆசிரியர்களை பாடசாலைகளுக்குக் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2019இல் புதிய கல்வி முறைமையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்று புதன்கிழமை (09) பிரதமரிடம் கேள்விகளைக் கேட்பதற்கான நேரத்தின்போது, எட்வட் குணசேகர எம்.பி கேட்டிருந்த கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், கடந்த காலத்தில், பாடசாலைகளுக்கோ, இன்றேல் மாணவர்களுக்கோ, தேவைக்கேற்ப ஆசிரியர்கள்…

Read More