இன்று முதல் யோசனைகளை வழங்கலாம்..!
தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்டவுள்ள புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க எதிர்பார்க்கும் இச்செயற்றிட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கைகள் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. அரசியல் அமைப்பு சாசனத்தில் பல்வேறு மாற்றங்களை உள்வாங்கும் நோக்குடன் தேசிய அரசாங்கத்தினால்…
