போரில் உயிர்நீத்த பொதுமக்களை நினைவுகூர தடையில்லை!
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு எந்தவித தடையுமில்லையென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்கான நினைவஞ்சலி நிகழ்வு (தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016) தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,…
