Headlines

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது

– சுஐப் எம் காசிம் – யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. ஆளை ஆள் விமர்சித்துக் கொண்டு ஒருவரை மற்றவர் குறை கூறிக்கொண்டிருந்தால் இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிரமமாகவே இருக்குமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் தமது பிரதேசத்திற்கு மீள் குடியேறச் சென்றுள்ள யாழ் முஸ்லிம்களுடனான கலந்துரையாடல் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.  இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற…

Read More

பரஸ்பரப் புரிந்துணர்விலேயே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கியுள்ளது

சகோதர இனங்களுடன் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ்வதன் மூலமே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கி உள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் மீள்குடியேறிய மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பின்னர் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, 25 ஆண்டுகள் தென்னிலங்கை அகதி முகாம்களில் நாம் பட்ட கஷ்டங்கள் போதும். இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும். சிறுசிறு பிரச்சினைகளுக்காக நமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்க முடியாது. அதேபோன்று மாற்றுச் சமூகத்தைச்…

Read More

இடம்பெயர்ந்து வாழ்வோர் 06 மாதங்களுக்குள் குடியமர்த்தப்படுவர் – ஜனாதிபதி அறிவிப்பு

போரின் பின்னரும் 6 வருடங்களாக தமது சொந்த வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழும் சுமார் ஒரு லட்சம் பேர் 6 மாதங்களுக்குள் சொந்த இடங்களில் வீடுகள் அமைக்கப்பட்டு குடியமர்த்தப்படுவர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார். ஏஎப்பி செய்திச்சேவைக்கு நேற்று வழங்கிய செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த உறுதிமொழியை அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்தோர் முகாமில் வைத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.. உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளவர்களை மீண்டும்…

Read More