Headlines

மீனவர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக விசேட தொலைபேசி இலக்கம் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கமைய 011-2346134 மற்றும் 0722244063 என்ற இரண்டு இலக்கங்களே கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களாகும். இதேவேளை, கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் இந்தத் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்க முடியும் என்பதோடு இதன்பொருட்டு நவீன உயிர்காப்பு உபகரணங்களோடு வைத்தியர் உள்ளிட்ட 6 ஊழியர்களைக் கொண்ட குழுவுடனான உயிர்காப்பு படகொன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

12 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் பயணித்த இரண்டு இழுவை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Read More

4 இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த படகு ஒன்றினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More