Headlines

மலேரியா அற்ற நாடாக இலங்கை பிரகடனம்

இலங்கையை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளது கொழும்பில் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் வருடாந்த மாநாட்டில் இதற்கான சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனத்தின்  பணிப்பாளர் நாயகம் மார்க்ரெட் சென் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் நேற்று கையளித்தார்.

Read More

மலேரியா நோய் தொடர்பில் துரித நடவடிக்கை

மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்றைய தினம் (11) நுவரெலியாவில்அடையாளங் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நோய் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் தொடர்பாக விசேட மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மலேரியா ஒழிப்பு பிரிவின் வைத்தியர் எச்.டபிள்யூ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்றைய தினம் நுவரெலியாவில் அடையாளம் காணப்பட்ட இந்தியப் பிரஜையான மலேரியா நோயாளியுடன் சேர்த்து இதுவரை இலங்கையில் 16 மலேரியா நோயாளிகள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைக்குள்…

Read More

மலேரியாவை பரப்ப இந்தியா சதி : மருத்துவ அதிகாரிகள் குற்றச்சாட்டு

இலங்கையில் சுமார் 40 வருடங்களாக மலேரியா நோய் காணப்படவில்லை. ஆனால் தற்போது நுவரெலியாவில் இந்தியர் ஒருவர் மலேரியா நோயுடன் இனம்காணப்பட்டுள்ளார். மலேரியா நோய் இல்லாத நாடாக காணப்பட்ட இலங்கையில் மலேரியாவை பரப்புவதற்கு இந்தியா சதித் திட்டம் செய்துள்ளது என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Read More