Headlines

இலங்கையில் 40% ஆண்களும் 2% பெண்களும் மதுவுக்கு அடிமை!

இலங்கையிலுள்ள 40 வீதமான ஆண்களும் 2 வீதமான பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக ஹெல்தி லங்கா நிலையத்தின் வேலைத்திட்டப் பணிப்பாளர் சாமிக ஜயசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் நலன்புரி அமைப்புகள் முன்னெடுத்துள்ள மது ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் குறித்த தகவலைத் தெரிவித்தார். வளர்ந்தோரில் ஒவ்வொரு இலட்சம் பேருக்கும் 33.4 சதவீதமானோர் ஈரல் அழற்சி நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 20 சதவீதமானோர் மதுவால் பாதிக்கப்பட்டவர்களே. எனவே,மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் பற்றி…

Read More

போதையில் வாகனம் செலுத்திய புதுமைப் பெண்கள்

மது போதையில் மோட்டார் சைக்கிளை வீதி முழுவதும் அங்கும் இங்குமாக செலுத்தி வந்த இரு இளம் பெண்கள் களுத்துறை, வடியமண்கட சந்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு அங்கு மது அருந்திவிட்டு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்தப் பெண்கள் பாணந்துறையிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் எனவும் வாதுவை நகரில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெண், கடும் போதையில் நிற்க முடியாது…

Read More