Headlines

போர்ட் சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் போர்ட் சிட்டிக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (4) மாலை நான்கு மணியளவில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்த திட்டத்தினை எதிர்க்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த போர்ட் சிட்டி திட்டத்தினை உடனே இடைநிறுத்துமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் 9 அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இதன் ஏற்பாட்டாளர் சுஜீவ சாம்கர தெரிவித்துள்ளார்.

Read More

சீன உயர்மட்ட குழு இலங்கை வருகிறது

சீன வர்த்தக அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான தினைக்களத்தின் பணிப்பாளர் யங் வியுகுன் தலைமையிலான சீன அரசாங்கத்தின் உயர் மட்ட குழு இன்று இலங்கை வருகின்றது. இன்று இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்த குழு ஹம்பந்தொட்டை துறைமுகம், கொழும்பு- கண்டி அதிவேக வீதி மற்றும் போர்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் தொடர்பிலும் ஆராயவுள்ளது. இலங்கையில் கடந்த அரசாங்கத்தினால் சீன நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட பல பாரிய திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் ஸ்தம்பிதம் அடைந்துள்ள…

Read More