Headlines

அதிக கட்டணம் வசூலித்த பேரூந்து நடத்துனர்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக இயக்கப்பட்டிருந்த விசேட பேரூந்து ஒன்றில் அசாதாரணமான முறையில் பயணிகளிடம் இருந்து அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கண்டி – ஹட்டன் வீதியில் பயணித்த பேரூந்து ஒன்றிலேயே இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக கண்டியிலிருந்து கினிகேத்தனவிற்கு 68 ரூபா அறவிடப்படும் எனினும் இப்பேரூந்து நடத்துனர் 250 ரூபா கேட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Read More

சாரதிகளே ஜாக்கிரதை : வருகிறது புதிய கருவி

போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்யும் நீண்ட தூர பஸ் சாரதிகள், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை நுகர்ந்துள்ளனரா எனக் கண்டுபிடிப்பதற்காக உடனடி போதைப்பொருள் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வாகனப் போக்குவரத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிரி சேனரத்ன கூறியுள்ளார். மதுபானம் அருந்தும் சாரதிகளை மட்டுமே உடனடியாக அறியக் கூடிய கருவிகள் தற்போது நாட்டில் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பஸ் விபத்து: மாணவன் காயம்

– க.கிஷாந்தன் – ஹட்டன் நகரத்திலிருந்து இன்று (3) காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது, டிக்கோயா தரவளை பகுதியில் 8 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் வேளையில் ஹட்டனில் இருந்து டயகம நோக்கி பயணித்த தனியார் பஸ் மாணவனின் மீது…

Read More

போக்குவரத்துத் துறை மோசடிகளுக்கு கடுமையான நடவடிக்கை!

போக்குவரத்துத் துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும்  தெரிவிக்கையில், மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தனியார் பிரிவு மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றின் பேருந்துகள் ஒரே தரிப்பிடங்களில் நிறுத்தப்படுகின்றன.அங்கு இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் என்னைவிட உங்களுக்கு நன்கு தெரியும்.பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளிடம் அடாவடித்தனமாக நடந்துகொள்ளும்…

Read More

இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காலி வீதியில், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான பகுதி மற்றும் சைத்திய வீதியிலும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 வரை கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் காலி முகத்திடல் சுற்றுவட்டம்…

Read More

கடந்த ஆண்டு அரசுக்கு 47.5 மில்லியன் வருவாய்

யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் கடந்த ஆண்டு அரசிற்கு கிடைத்த வருமானம் 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் மட்டும் கடந்த ஆண்டில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறல், புதுப்பித்தல் நடவடிக்கைகள் மூலம் அரசிற்கு கிடைத்த வருமானத்தின் தொகை 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம் மாதம் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 35…

Read More