Headlines

மாவட்ட புற்றுநோய் சங்கத்திற்கு நன்கொடை

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் சங்கத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நிர்மாணிப்பாளர்கள் நலன்புரிச் சங்கத்தினால் ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை (23) மாமாங்கத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் வை. தர்மரட்ணம் கருத்து தெரிவிக்கும் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் நோயாளர்களின் நலன் கருதி கொழும்பு மற்றும் மஹரகம புற்று நோய்…

Read More

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நவீன ரக சி.ரி. ஸ்கேனரை பெற்றுக் கொள்வதற்கு உதவி கோரல்

– அஷ்ரப் ஏ சமத், சத்தார் எம் ஜாவித் – மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லைக்கு நவீன ரக பெற் சி.ரி ஸ்கேனர் ஒன்றை வழங்­க­வ­தற்கு இன, மத பேத­மின்றி ஒன்­றி­ணைந்து உத­வு­மாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சுமார் 1,100 பேர் தங்கி சிகிச்சை பெறு­வ­தா­கவும், அத­னை­விட நாளாந்தம் சுமார் 1,500 பேர் வரை சிகிச்­சை­களை பெற்றுச் செல்­வ­தற்­காக வருகை தரு­வ­தா­கவும் வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதே­வேளை, இலங்­கையில் சுமார் ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மா­ன­வர்கள் இந்த நோயினால்…

Read More

புற்றுநோயை தடுக்க புதிய மாத்திரை

மாமிச உணவுகளை உட்கொள்வதை விடுத்து பச்சை காய்கறிகளை உட்கொள்வதனால் உயிர்கொல்லி நோயான புற்றுநோயை தடுக்க முடியும் என தற்போது அமெரிக்க ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட 38 பேரை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் பச்சை தாவரங்களினால் உருவாக்கிய சல்ஃபரோபேன் (Sulforaphane) எனும் கலவைக்கு புற்றுநோயை எதிர்க்கக்கூடிய சக்தி இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். ப்ரோக்கோலி தாவரத்தின் முளைகளில் இருந்து சல்ஃபரோபேன்  பெற்றுக்கொள்ளப்படுகின்றது என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read More