Headlines

புறக்கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல்

கான் கடிகார கோபுர சுற்றுவட்டப்பகுதியில் துறைமுக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் கொழும்பு புறக்கோட்டையை சுற்றியுள்ள பாதைகளில் கடும் வாகன நெரிசல்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த போராட்டம் காரணமாக மோதரையில் இருந்து மட்டக்குளி திசைக்கு செல்லும் ரெக்லமேசன் பாதை  முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமது மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி  இப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என்று இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சந்திரசிறி  மகாகமகே கூறினார்.

Read More

துர்நாற்றம் வீசும் மிதக்கும் சந்தை

புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கருகில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை பஸ்தியன் மாவத்தை பஸ் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஊடாக மனிங் சந்தைக்கு வரும் பொதுமக்களே இந்த துர்நாற்றத்தினால் பல்வேறு அளெகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மிதக்கும் சந்தை அமைந்துள்ள வாவி பகுதியானது பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதாலேயே இவ்வாறு துர்நாற்றம் வீசுவதாக இங்கு வசிக்கும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக பல்வேறு  தேவைகளுக்காக தலைநகரிற்கு வருவோரும் இதனால்…

Read More

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பாரிய வாகன நெரிசல்

புதிய போக்குவரத்து நடைமுறைகள் அறிமுகம் செய்துள்ளமையால், கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனடிப்டையில் கொழும்பு புறக்கோட்டையை நோக்கி செல்லும் வாகனங்கள் சற்றும் நகர முடியாத வகையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளவத்தை, பம்பலபிட்டி, கொள்ளுபிட்டி ஆகிய பகுதிகளிலும் காலி வீதியிலும் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இதனாலேயே தற்போது அதிக வாகன நெரிசல் காணப்படுகின்றமை…

Read More