“அடுத்த சில வாரங்களில், ஆச்சரியப்படும் தீர்மானங்கள்” – முக்கியஸ்தர்கள் கைதாகும் வாய்ப்பு
புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் மக்கள் ஆச்சரியப்படும் தீர்மானங்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்படலாம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை ஊழல், மோசடிகள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளதுடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் நியமிக்கப்படாமல் இருந்ததால், விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. புதிய சட்டமா…
