சட்டம் அனுமதித்தால் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளை சுட்டே கொல்வேன்
இந்தியச் சட்டம் அனுமதியளித்தால் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்வேன் என்று டில்லி பொலிஸ் ஆணையாளர் பி.எஸ்.பஸ்ஸி தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பெண்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம். பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, சட்டம் அனுமதித்தால், சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுடவோ, தூக்கிலிடவோ விரும்புகிறோம். அத்தகைய அதிகாரத்தை பயன்படுத்த டில்லி பொலிஸ் தயங்காது. பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்வது நல்லது. அதற்காக நாங்கள் பொறுப்பை…
