Headlines

எனக்கு ஞாபகமே இல்லை: துமிந்த

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலையோ, 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலோ, தனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இந்த வழக்கிலிருந்த தன்னை முழுமையாக விடுதலை செய்யுமாறும் கோரிநின்றார். பிரதிவாதிக் கூண்டிலிருந்து வாய்வழியான சமர்ப்புகளை முன்வைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

தெமட்டக்கொடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியோருக்கும் காயம்?

தெமட்­ட­க்கொடை, சமந்தா திரை­ய­ரங்கு அருகே தெமட்­ட­க்கொட சமிந்த உள்­ளிட்ட பாரதலக் ஷ்மன் பிரே­மச்­சந்­தி­ரவின் கொலை சந்­தேக நபர்­களை ஏற்றிச்சென்ற சிறைச்­சாலை பஸ் வண்டி மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டின் போது, துப்­பாக்கிச் சூட்டை நடத்­திய சந்­தேக நபர்கள் தரப்­பிலும் ஒரு­வ­ருக்கு காயம் ஏற்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. சிறைச் சாலை பஸ் வண்­டியில் பய­ணித்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் நடத்­திய பதில் தாக்­கு­தலில், தாக்­குதல் நடத்த மோட்டார் சைக்­கிளில் வந்த சந்­தேக நபர் ஒரு­வரே இவ்­வாறு காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். துப்­பாக்கிச்…

Read More

ஹிருணிகா ஓர் அப்பாவி! சுமணா பிரேமச்சந்திர

தனது மகள் ஹிருணிகா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி என்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தெமட்டகொடை வாலிபர் ஒருவர் டிபெண்டர் வாகனத்தில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிருணிக்கா கைது செய்யபட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹிருணிக்கா குறித்து அவரது தாயார் சிங்கள ஊடகமொன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார். அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த கடத்தல் சம்பவத்துடன் ஹிருணிக்கா எவ்வகையிலும் தொடர்பற்றவர். அவரது எதிரிகளே இந்தச் சம்பவத்துடன் அவரது பெயரைத் தொடர்புபடுத்தியுள்ளனர்….

Read More