Headlines

வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர்!

கொழும்பு மேல்மாகாண நுண்வரைகலை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதான மன்றத்தின் (ஜாதிக சமகி சங்கமய) வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வானது இலங்கை குடியரசு தினம் (மே 22), சர்வதேச உயிரியல் பல்வகைமை தினம் (மே 21), உலக கலாச்சார தினம் (மே, 22) ஆகிய தினங்களையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரன்பண்டா ஜெயவர்தன, வரவேற்றார். இதேவேளை,…

Read More

கனடா உயர் ஸ்தானிகர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கைகான கனடா உயர் ஸ்தானிகர் செல்லி வைடனிங்கும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(16)பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

Read More

இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய ரக போர்விமானங்கள்

இலங்கை விமானப்படைக்காக போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார். இலங்கை விமானப்படையில் காணப்படும் போர் விமானம் 30 வருடங்கள் பழைமையானது எனவும் அதன் பாவனைக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனால் விமானப்படைக்கு புதிய ரக போர் விமானங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்காகவே போர்விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. ஆனால் எந்த நாட்டிலிருந்து போர் விமானங்கள் கொள்வனவு செய்வது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர்…

Read More