Headlines

பஸ் கட்டணமும் அதிகரிக்கும்?

வற்வரி அதிகரிப்பு காரணமாக, பேருந்து கட்டணங்கள் 25 சதவீதத்தினால் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்டண அதிகரிப்பின் பிரகாரம், ஆகக்குறைந்த கட்டணமான 8 ரூபாய் கட்டணம், 10 ரூபாயாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியார் பேருந்துத் துறையைப் பாதுகாக்கும் பொருட்டே, இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து பேச்சு

தனியார் மருத்­துவம், கல்வி மற்றும் தொலை­பே­சிக்­கட்­டணம் ஆகி­ய­வற்­றுக்­கான வற் வரி மே மாதம் 3ஆம் திகதி முதல் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. எனவே தனியார் பஸ் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்­க­ளையும் அதி­க­ரிக்க நேரி­டுமா என்­பது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­தாக தனியார் போக்­கு­வ­ரத்து சங்­கத்தின் தலைவர் கெமுனு விஜ­ய­ரத்ன தெரி­வித்தார். வற் வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­மாயின் தனியார் பஸ் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்பு ஏற்­ப­டுமா என்ற கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து கூறினார்.

Read More

தொடர்ச்சியாக எட்டு வாகனங்களை முட்டித்தள்ளிய பஸ்!

அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லொறிகள், கார், முச்சக்கர வண்டி மற்றும் வேன் போன்ற வாகனங்களுடன் தொடர்ச்சியாக மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

புத்தாண்டு போக்குவரத்துச் சேவையில் 6,000 பஸ்கள்!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை, விசேட பஸ் போக்குவரத்துச் சேவையொன்றை நடத்த, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, கொழும்பிலிருந்து பிற மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்காக 6 ஆயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. இதற்கு மேலதிகமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காகவும் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக ஆணைக்குழு மேலும் கூறியது.

Read More

இன்றுமுதல் ஆசன முன்பதிவுக்கு தடை.!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (8) முதல்   புத்தாண்டு காலம் நிறைவடையும் வரையில் பஸ்களில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியாது எனவும் இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிகருதியே இந்த சேவை இடம்பெறவுள்ளதாகவும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இச் சேவையை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். 50 மேலதிக ரயில் சேவைகளும் 3482 மேலதிக இ.போ.ச. பஸ் சேவைகளும் நடத்தப்பட…

Read More

இன்று முதல் விசேட பஸ் சேவைகள்!

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும 25 ஆம் திகதி வரை பயணிகளுக்கான விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 6000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அதிவேக வீதிகளிலும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.

Read More

பஸ் முறைப்பாடுகளை 1955க்கு சொல்லுங்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது 011-2333222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடல், பற்றுச்சீட்டு பெற்றுக்கொடுக்காமை, உரிய பாதையில் பயணிக்காது குறுக்கு வீதிகளினூடாகப் பயணித்தல் போன்ற குற்றங்களை, பஸ் நடத்துனர்கள் மேற்கொள்வார்களாயின், அவை தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்யலாம்….

Read More

தெமட்டக்கொடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியோருக்கும் காயம்?

தெமட்­ட­க்கொடை, சமந்தா திரை­ய­ரங்கு அருகே தெமட்­ட­க்கொட சமிந்த உள்­ளிட்ட பாரதலக் ஷ்மன் பிரே­மச்­சந்­தி­ரவின் கொலை சந்­தேக நபர்­களை ஏற்றிச்சென்ற சிறைச்­சாலை பஸ் வண்டி மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டின் போது, துப்­பாக்கிச் சூட்டை நடத்­திய சந்­தேக நபர்கள் தரப்­பிலும் ஒரு­வ­ருக்கு காயம் ஏற்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. சிறைச் சாலை பஸ் வண்­டியில் பய­ணித்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் நடத்­திய பதில் தாக்­கு­தலில், தாக்­குதல் நடத்த மோட்டார் சைக்­கிளில் வந்த சந்­தேக நபர் ஒரு­வரே இவ்­வாறு காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். துப்­பாக்கிச்…

Read More

வீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து (படங்கள்)

– பா.திருஞானம் – பூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று (19) காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான இந்த பேரூந்து இரவு வேளையில் இப்பிரதேசத்திலேயே நிறுத்தி வைக்கப்படும். காலையில் பூண்டுலோயா நகரத்திலிருந்து ஹட்டனுக்கு தனது சேவையை தொடர்ந்து வந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே…

Read More

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பாறூக் வபாத்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்னை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 60வயது வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காத்தான்குடி டெலிகொம் வீதியைச் சேர்ந்த ஐ.எல்.எம்.பாறூக் எனும் 60 வயதுடைய நபரே குறித்த விபத்தில் மரணித்துள்ளார். இவ் விபத்து நேற்று புதன் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபர் தலையில் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையிலேயே…

Read More

சாரதி உறக்கம்: விமானத்துடன் மோதிய பஸ்

நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த விமா­ன­மொன்­றுடன் பஸ் ஒன்று மோதிய சம்­பவம் கொல்­கத்­தாவில் நேற்று இடம்­பெற்­றது. கொல்­கத்­தா­வி­லுள்ள நேதாஜி சுபாஸ் சந்­தி­ரபோஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த எயார் இந்­தியா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான விமானம் ஒன்றின் மீது, விமான நிலை­யத்­திற்குள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த ஜெட் எயார் வேஸ் நிறு­வ­னத்தின் பஸ் ஒன்று மோதி­யது. நேற்று (4) அதி­காலை 5.25 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. அஸாம் மாநி­லத்­தி­லுள்ள சில்சார் நக­ருக்குப் புறப்­ப­ட­வி­ருந்த விமா­னமே இவ்­வாறு சேத­ம­டைந்­ததுள்ளது. மேற்­படி பஸ்ஸின் சாரதி அதி­கா­ரி­களால் விசா­ரிக்­கப்­பட்­ட­போது,…

Read More