Headlines

மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி!

பாதுக்க – முருதகஹஹேன பிரதேசத்தில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் பாதுக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,மரண பரிசோதனைகள் இன்று (18) இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

வத்தளையில் கடலுக்கு நீராட சென்ற இருவர் பலி

வத்தளை – பிரிதிபுர கடலில் நீராட சென்ற இருவர் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தலவாக்கலை – லிந்துலை – பரகம் பிரதேசத்தை சேர்ந்தவர்களே பலியாகியுள்ளனர். குறித்த இருவரும், மேலும் சில நபர்களுடன் நீராட சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள், ராகம போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More