நோன்பு மாதத்தில், தேர்தலை நடாத்தவேண்டாம் – ஜனாதிபதி உத்தரவு
– A.R.A. பரீல் – தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்கப்படக் கூடாதெனவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் முஸ்லிம்களின் புனித கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்கும் ரமழான் மாதமாகையால் அம்மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட்…
