Headlines

அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதில் சிரமம்: நிதி அமைச்சு

இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ். அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய பொருளாதார ரீதியான மதிப்பீடுகளை மேற்கொள்வது மிகவும் சிரமமான காரியமாகும். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் பற்றிய விபரங்களை துல்லியமாக திரட்ட முடியாதுள்ளது.இன்னமும் வெள்ளம் முழுமையாக…

Read More

அரச சேவையாளர்களுக்கு 2 வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள்!

அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆவணங்களை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. வாகனங்கள் பெற்றுக்கொள்வதற்கு தகுதியான அரச ஊழியர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரச ஊழியரின் சேவை காலத்தில் 60 ஆண்டுகள் நிறைவடையும்போது 3 வாகன உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிராக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்திள்ளது

Read More