மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் – நாமல்
அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ச அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் அந்த அறிக்கையில், ஏனைய அதிகாரிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாத காரணத்தினால் மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பை நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். எனினும் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ச என்பதனை…
