Headlines

மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் – நாமல்

அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ச அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் அந்த அறிக்கையில், ஏனைய அதிகாரிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாத காரணத்தினால் மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பை நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். எனினும் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ச என்பதனை…

Read More

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்!

பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து 307 மில்லியன் ரூபாக்களை சம்பாதித்தமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கொழும்பு 5ல் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கருதப்படும் என்.ஆர். கண்சல்டன்ஸ் மற்றும் க்வர்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ள அலுவலகங்களில் இருந்து கடுவலை நீதிவானின் உத்தரவுக்கு அமைய 12 ஆவணங்களும் 4 கணினிகளும் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணைகள்…

Read More

நாமலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணச் சலவை சட்டத்தின் கீழ் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். 12.5 கோடி ரூபாவை பயன்படுத்தி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சேவை வழங்கும் கவர்ஸ் கோபரேஷன் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தை கொள்வனவு செய்தமை சம்பந்தமாகவே இந்த…

Read More

மஹிந்த அணியின் கோரிக்கை சபாநாயகர் கருவினால் நிராகரிப்பு

பாரா­ளு­மன்­றத்தில் பொது எதி­ர­ணி­யாக சுயா­தீ­ன மாக செயற்ப­டு­வ­தற்கு அனு­மதி வழங்க வேண்­டு­மென கோரிக்கை விடுத்த மஹிந்த அணி­யி­னரின் வேண்­டு­கோள் சபா­நா­ய­க­ரினால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மஹிந்த ஆத­ரவு அணி எம்.பிக்கள் சபை மத்­தியில் வந்து கூச்சல் குழப்­பத்தில் ஈடு­பட்­டனர். இக்­கூச்சல் குழப்­பத்­திற்கு மத்­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் முன்­வைத்த உள்­ளூ­ராட்சி சபை­கள் தேர்தல் திருத்த சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. 52 எம்.பிக்கள் கையெ­ழுத்­திட்டு இணைந்த பொது எதி­ர­ணி­யாக பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்­கான கடிதம் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட போதும் அதற்கு…

Read More

என்னையும் விரைவில் கைது செய்வார்கள்! ஹம்பாந்தோட்டையில் நாமல்

அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய நாமல், அரசாங்கத்தினால் பொதுமக்களை திருப்திப்படுத்த முடியாமல் போயுள்ளது. எனவே தான் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துள்ளது என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார். பழிவாங்கல் நடவடிக்கையாகவே தமது சகோதரர் யோசித்தவும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

ராஜபக்ஸகளின் கண்ணீர் தொடர்பில் அப்சரா பொன்சேகாவின் கருத்து

எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூடீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும் என்பதை நாமல் உணரட்டும், இந்த கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச தனது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை…

Read More

எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஜனாதிபதியைச் சந்திக்கவில்லை : நாமல்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை உத்­தி­யோக பூர்­வ­மா­கவோ அல்­லது உத்­தி­யோ­கப்­பூர்­வ­மற்ற வகை­யிலோ எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சந்­தித்­தி­ருக்­க­வில்­லை­யென முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க் ஷவின் புதல்­வரும் அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் நாமல் ராஜ­பக்­ ஷ­வுக்கும் இர­க­சிய சந்­திப்பு ஒன்று கடந்த வாரம் இடம் பெற்­றுள்­ள­தாக ஆங்­கில ஊட­க­மொன்று செய்தி வெளியிட்­டி­ருந்­தது. குறித்த செய்­தியில், தனது குடும்ப உறுப்­பி­னர்கள் பல்­வேறு வகை­யான விசா­ர­ணை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஒருவர் ஐந்­தாறு விசா­ர­ணை­களை எதிர்­கொண்­டு­விட்­ட­தா­கவும் நாமல் ரர­ஜ­பக்ஷ மைத்­தி­ரிக்கு…

Read More