Headlines

பாதித்தோரை நல்லாட்சி கைவிடாது

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும், தாய்நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரையும், நல்லாட்சி அரசாங்கம் கைவிடாது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை காலவரையரையின்றிக் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். அதுமட்டுமன்றி, உட்கட்டமைப்பு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட சகல வசதிகளும் ஏற்படுத்தி…

Read More

அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி

– ஏ.பி.மதன் – நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினைக் கவிழ்க்கும் மாற்றுச் சக்திகளின் கனவு, ஒருபோதும் நனவாகாது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் ஊடகங்களின் பிரதானிகளையும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் (27) புதன்கிழமை சந்தித்து  நல்லாட்சி அரசாங்கத்தின் போக்குப் பற்றி விளக்கமளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

சிறிதுகாலம் பொறுத்திருங்கள் – ரவி கருணாநாயக்க

நல்லாட்சியை  வழங்கிய மக்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள் நீங்கள் எதிர்பார்த்த  வசந்த காலம் வரும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கபட்டது. இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன்போது பேசுகையிலேயே நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க மேற்கண்டவாறு…

Read More

ஜெனீவா செல்லும் கூட்டு எதிர்க்கட்சி

– லியோ நிரோஷ தர்ஷன் – நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில்  முறைப்பாடு செய்யவே கூட்டு எதிர்க்கட்சி ஜெனீவா செல்லவுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் உதயகம்பில ஆகியோர் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஜெனீவா பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மின்சார கோளாறுகளால் பெரும் நெருக்கடி

நல்லாட்சியில் கட்சி பேதங்களையும் தொழிற்சங்க பேதங்களையும் மறந்து மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிருத்தி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நானுஒயா, டெஸ்போட் மேல்பிரிவு, கிழ்பிரிவு, கிலோஷா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற 61 வீடுகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார். இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆகியோரும்…

Read More

நல்லாட்சி அரசாங்கம் 48 பௌத்த பிக்குகளை கைது செய்துள்ளது!

நல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் 48 பௌத்த பிக்குகளை கைது செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முற்போக்கு தேசிய ஒன்றியத்தின் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்… சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பௌத்த பிக்குகள் 48 பேரை நல்லாட்சி அரசாங்கம் கைது செய்துள்ளது. யானைக்…

Read More

இரத்தக் கறை படிந்தவர்கள் தேங்காய் உடைப்பது சாபக்கேடு

‘நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று சிலர், சிதறு தேங்காய் உடைக்கின்றனர். நேர்மையானவர்களே சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். மாறாக இரத்தக்கறை படிந்தவர்கள் தேங்காய்களை உடைப்பதால் எதுவும் நடந்துவிடுவதில்லை’ என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாவலப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், ‘பல ஊடகவியலாளர்களின் கொலைக்கு காரணமானவர்கள், பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவை சிறையில் தள்ளியவர்கள் தேங்காய்களை உடைப்பதால்…

Read More

மஹிந்தவுக்கு மனிதாபிமானமென்றால் என்னவென்றே தெரியாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது. எமது அரசியல் பயணத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் சர்வாதிகார ஆட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்ட போதும் மக்கள் அதன் நீண்டகால பயணத்திற்கு அனுமதியினை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட நல்லாட்சியின் பிரதிபலனையே இன்று மூவின மக்களும் பயன்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்hடர். பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை…

Read More

45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிவு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் அறக்கொட்டித் தாக்கத்தால் 45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிந்து நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, கிரான், செங்கலடி உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளன. இம்மாவட்டத்தில் இம்முறை ஒரு இலட்சத்து 60ஆயிரம் ஏக்கரில் பெரும்போகம் செய்கை பண்ணப்பட்டுள்ளது. மேலும், நல்லாட்சி அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள்…

Read More

சீன உயர்மட்ட குழு இலங்கை வருகிறது

சீன வர்த்தக அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான தினைக்களத்தின் பணிப்பாளர் யங் வியுகுன் தலைமையிலான சீன அரசாங்கத்தின் உயர் மட்ட குழு இன்று இலங்கை வருகின்றது. இன்று இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்த குழு ஹம்பந்தொட்டை துறைமுகம், கொழும்பு- கண்டி அதிவேக வீதி மற்றும் போர்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் தொடர்பிலும் ஆராயவுள்ளது. இலங்கையில் கடந்த அரசாங்கத்தினால் சீன நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட பல பாரிய திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் ஸ்தம்பிதம் அடைந்துள்ள…

Read More

நல்லாட்சியை முன்னெடுக்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பின்  ஒரு வருட பூர்த்தியை தேசிய அரசாங்கமானது நாளை மறுதினம் கொண்டாடவுள்ள நிலையில் நாளைய தினம் மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய ஒன்றினைந்த சிவில் அமைப்புக்கள்   நல்லாட்சியை மலரச் செய்வதற்காக மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து  பயணிக்குமாறு வலியுறுத்தி  மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளது. மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படுகின்றமை, ஊழல் வாதிகளுக்கு எதிராக அரசின் மந்தமான விசாரனைகள், தனிப்பட்ட கட்சிகளின்  தேவைகளுக்கு ஜனநாயக தேர்தல்களை…

Read More

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் சாதாரண உடையில் பங்கேற்ற ஜனாதிபதி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேரடி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண உடையில் பங்கேற்றுள்ளார். இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பங்கேற்றுள்ளார். அண்மைய வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக வருகை தந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட வானொலி நிகழ்ச்சிகளுக்கு கலையகத்திற்கு சென்றதில்லை எனவும், வீடுகள் அலுவலகங்களிலிருந்தே பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும்…

Read More