உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ள இலங்கை
– ரொபட் அன்டனி – ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரி்ல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான தூதுக்குழுவை பங்கேற்கவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்திவருகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால் அரசாங்கம் உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ளது. குறிப்பாக 32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் உள்ளக…
