போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் நாலரை மணி நேரம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பான விவகாரத்தில் நேற்று (4) போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவரிடம் நான்கரை மணிநேரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசேகர தலைமையிலான குழுவினர் சிறப்பு விசாரணை ஒன்றினை முன்னெடுத்து வாக்குமூலம் ஒன்றினை பதிவுசெய்துகொண்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார். பிரதிப்…
