Headlines

தனியார் துறையினருக்கு இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்பு

– அழகன் கனகராஜ் – சேவையாளர்களின் வரவு – செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

சம்பளத்தை 3500 ரூபாவால் அதிகரிக்க பிரேரணை

தனியார் துறை ஊழியர்களுக்கு 3500 ரூபா சம்பள உயர்வை வழங்கும் வகையில் சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஏதிர்வரும் தினங்களில் இந்த திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொதுவான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவோம்

– ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம் –  அரச ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை இரத்து   செய்வதற்கோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலோ எதுவிதமான  தீர்மானத்தையும் அரசு மேற்கொள்ளவில்லையென இன்று  சபையில் உறுதியளித்த  பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க எதிர்காலத்தில்  அரச தனியார் துறையினருக்கு பொதுவான  ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட  உரையொன்றை ஆற்றும்- போதே பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

Read More