Headlines

கொழும்பில் டெங்கு அபாயம்

டெங்கு நுளம்பு கொழும்பு மாவட்டத்தில் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறினார்.

Read More

மலையகத்தில் பரிசோதனை

உலக டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரேயா நகரத்தில் இன்று காலை லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் லிந்துலை பொலிஸார் உள்ளிட்ட சுகாதார தாதிமார்கள் கிராம சேவகர்கள் உட்பட நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள் அடங்கலாக பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது உணவகங்கள் மற்றும் கடைத்தொகுதிகள், மதுபானசாலைகள், பாடசாலைகள் என பல்வேறுபட்ட இடங்கள் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் டெங்கு பரவும் சூழலைக் கொண்ட வீடுகள் மற்றும் கடைத்தொகுதிகளுக்கு சிவப்பு பத்திரிகை…

Read More

மட்டக்களப்பில் 78 பேருக்கு டெங்கு

இந்த வரு­டத்தின் ஜன­வரி முதலாம் திகதி முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 78 பேர் டெங்கு நோய்த் தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக மாவட்ட பிராந்­திய சுகா­தாரப் பணிப்­பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ரஹ்மான் தெரி­வித்தார். இதே­வேளை, இந்த வரு­டத்தில் நுளம்­புப்­பெ­ருக்­கத்­துக்கு ஏது­வாக சூழலை வைத்­தி­ருந்த 30 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது. இந்த மாவட்­டத்தில் டெங்கு நோய்த் தாக்­கத்தைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில், நாளொன்­றுக்கு 100 வீட்டு வளா­கங்­களில் சோதனை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. வீட்­டுப்­பீ­லிகள், கிண­றுகள் உள்­ளிட்­ட­வற்றில்…

Read More

டெங்கு அபாயம் அதிகரிப்பு!

நாடு முழுவதும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 837 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதில் அநேகமான நோயாளர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களுக்குள் வட பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு…

Read More

தெல்தெனியவில் டெங்கு அபாயம்

கடந்த சில­வா­ரங்­க­ளாக மழை பெய்து ஓய்ந்­த­தை­ய­டுத்து கண்டி, தெல்­தெ­னிய பிர­தே­சங்­களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்­ப­டு­வ­தாக தெல்­தெ­னிய பொது சுகா­தார அதி­கா­ரிகள் அலு­வ­லகம் தெரி­விக்­கின்­றது. இதே­வேளை இரு டெங்கு நோயா­ளர்கள் இப்­பி­ர­தே­சங்­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வ­லு­வ­லக சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­வித்­த­துடன் இது தொடர்­பாக இப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு தெளி­வூட்டும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர். இது இவ்­வா­றி­ருக்க பொது சுகா­தார அதி­கா­ரிகள் வீடுகள் தோறும் வந்து சுற்­றா­டல்­களை பரி­சோ­தனை செய்து வரு­கின்­றனர்.டெங்கு நுளம்­புகள் பரவும் வகையில் வீட்டுச் சுற்­றா­டலை…

Read More