இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, இந்த வருடத்தில் நுளம்புப்பெருக்கத்துக்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளொன்றுக்கு 100 வீட்டு வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது. வீட்டுப்பீலிகள், கிணறுகள் உள்ளிட்டவற்றில்…