கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் கடற்படை கப்பல்கள்
ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளன. குறித்த கப்பல்கள், இரண்டு நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவின் அடிப்படையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜே.எம்.எஸ்.டி.எப்.இனசுமா மற்றும் சுசுட்சுக்கி போன்ற கப்பல்களே இவ்வாறு இலங்கை வந்துள்ளது. இதேவேளை குறித்த கப்பல்களில் வந்துள்ள ஜப்பான் கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
