சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது
இந்தியாவுடன் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது, அதற்குப் பதிலாக வர்த்தக தொழில்நுட்ப உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், இந்தியாவுடன் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படப் போவதாகவும் இதனால் இலங்கையை இந்தியா ஆக்கிரமித்துவிடும் என்றும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இதில் உண்மையெதுவுமில்லை. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெளிவான அறிக்கையொன்றை விடுத்தார்.தனது இந்திய விஜயத்தின் போது சீபா உடன்படிக்கை தொடர்பாக பேசப்படவில்லை. அவ் உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது என்றும் தெரிவித்தார். தேசப்பற்று தொடர்பாக பேசும்…
