Headlines

26 பாடசாலைகள் மூடப்பட்டன

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியமையை அடுத்து, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 26 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் தொடங்தெனிய வித்தியாலயலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் 25 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புத்தளம், நிக்கரவெட்டிய, சிலாபம், கிரிஉல்ல ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Read More

தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிப்பு

சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில் எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலும் வேனில் ஏற்பட்ட தீ காரணமாக இவர்கள் அனைவரும் எரியுண்டு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More