வேறு ஒருவரின் பெயரில் சிம் இணைப்புகளை பயன்படுத்த தடை!
– ஆர்.கிறிஷ்ணகாந் – இலங்கையில் பாவனையிலுள்ள சகல தொலைபேசி இணைப்புகளின் உரிமை யாளர்களை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து தொலைபேசி சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது வேறு ஒருவரின் பெயரில் சிம் இணைப்புகளை பெற்றுக் கொள்வது இத்திட்டத்தினூடாக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாவனையிலுள்ள சிம் உரிமையாளர்கள் தொடர்பில் நிலவும் சிக்கல்கள் வெகுவிரைவில் தீர்ப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு…
