சிசிலியாவின் தங்க நகைகளை மதிப்பீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
கோல்டன் கீ நிதிமுறைகேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவவின் மொத்த தங்க நகைகளை மதிப்பீடு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை நேற்று (25) சீஐடிக்கு பிறப்பித்தார். கோல்டன் கீ வழக்கில் வாடிக்கையாளர்களின் 4.3 மில்லியன் சொத்துக்களை முறைகேடு செய்த குற்றச்சாட்டே சிசிலியா மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிசிலியாவின் தங்க நகைகளை விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் வைப்புக்களை மீளச்செலுத்தமுடியுமா? என்பது குறித்து ஆராயுமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும், நேற்று நீதிமன்றத்தில்…
