Headlines

சிகிரியா வருமானம் அதிகரிப்பு

சிகிரியாவைப் பார்வையிட வரும் உல்லாசப் பிரயாணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனால் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஆறரைக் கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய கலாசார நிலையத்துக்கு சொந்தமான சிகிரிய திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் சிகிரியாவுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 150,000 இனைத் தாண்டியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 34 சதவீத அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Read More