Headlines

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முப்படைத்தளபதிகள் சகிதம் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று (12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். அண்மையில் இராணுவ வெடிபொருட்கள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த பகுதியில் இடம்பெற்ற தீயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயற்படும் வகையில் இவ்விஜயம் அமைந்தது. இக்கண்காணிப்பு விஜயத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக சுருக்கமாக பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இவ்விஜயத்தில் பாதுகாப்பு செயலாளர், முதலில் படைவீரர் கிராம மக்களையும் தொடர்ந்து கொஸ்கம…

Read More

சாலாவ வெடிப்பை வீடியோ செய்த மஹிந்த

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், தல்தென ஞானசார தேரர் சிகிச்சைப் பெற்றுவருகின்றார். அவரை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார் அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் சென்றிருந்தனர்….

Read More

சாலாவ: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு

சாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) வழங்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.

Read More

இராணுவ தளபதி அனுதாபம்

சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தனதுஅனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

சாலாவ சம்பவம்: 80 சதவீதமான வெடிபொருட்கள் மீட்பு

கொஸ்கம சாலாவ பகுதியில் 80 சதவீதாமான வெடிபொருட்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். கேர்ணல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் செல்ல தடை

அண்மையில் பாதிப்பு உள்ளான சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் பிரவேசிக்க இருவார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவப் படையினர் இந்த தடையை விதித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இராணுவ முகாமிற்குள் பிரவேசித்து விசாரணைகளை நடத்தவும் கண்காணிக்கவும் இரண்டு வார காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More