Headlines

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவி

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரமளித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் ஓர் நிலையான நிதி நிலைமையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கு ஒருமித்த கருத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த காலத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன்,  நாணய நிதியம் தொடர்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

Read More

உலக வங்கியின் மாநாட்டில் நிதியமைச்சர்!

– பா.ருத்ரகுமார் – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நிதியமைச்சர் ரவி கருனாநாயக்க நாளை ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. ஐக்கிய அமரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு இம்மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறும். இம்மாநாட்டுக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 187 நாடுகளின் நிதியமைச்சர்களும் நிதித்துறை தலைவர்களும் பங்குபற்றுகின்றனர்.

Read More