சிறுவனின் சடலம் மீட்பு: சிறுவன் கைது
திருகோணமலை சம்பூர் பகுதியில் பாழடைந்த கிணற்றொன்றிலிருந்து 6 வயதான சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 15 வயதான சிறுவனை சந்தேகத்தின் பேரில் இன்று (02) பகல்; கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை சம்பூர் பகுதியில் பாழடைந்த கிணற்றொன்றிலிருந்து 6 வயதான சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 15 வயதான சிறுவனை சந்தேகத்தின் பேரில் இன்று (02) பகல்; கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பூர் பகுதியையே சோகத்துக்குள்ளாக்கியுள்ள ஆறு வயதுப் பாலகனான குகதாஸ் தருஷனின் மரணத்தின் மர்மத்தை மருத்துவ அறிக்கைகள் மூலமோ அல்லது விசாரணை அறிக்கைகள் மூலமோ முழுமைக் கண்டு பிடிக்கப்பட முடியாத நிலையில் பல்வேறு சந்தேகங்கள், ஊகங்கள் எழுந்துள்ளன. இதேவேளை சிறுவனின் மரணம் தொடர்பில் உடனடியான முடிவுக்கு வரமுடியவில்லை. அத்துடன் தேவையான ஆதாரங்களை திரட்டியதன் பேரிலும் பல்வேறு பரிசோதனைகளையும் ஆய்வுகளை மேற்கொண்டதன் பேரிலுமே மரணத்துக்கான காரணத்தைக் கூற முடியும் என திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் மருத்துவ…
திருகோணமலை – சம்பூர் 7 கிராமத்திலுள்ள கிணற்றில் கல்லொன்றுடன் கட்டப்பட்ட நிலையில் மாணவனொருனின் சடலம் இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 6 வயதுடைய மாணவனுடையது என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.