Headlines

அமைச்சர் சம்பிக்க கைது செய்யப்படுவாரா?

இராஜகிரிய பிரதேசத்தில் அமைச்சர் பாட்டலி சம்பிக்கவின் வாகனத்தில் இளைஞர்ஒருவர் மோதி காயமடைந்த சம்பவத்தில் பதிவான சீ.சீ.டி.வி காணொளிகளையும், 5இறுவட்டுக்களையும் பரிசோதனையின் பொருட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்குஅனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு நீதிமன்ற நீதவான் சந்தன கலங்சூரிய இன்றைய தினம்விடுத்துள்ளார். இந்த பரிசோதனையின் அறிக்கைகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டபின்னர் அமைச்சர் சம்பிக்கவை கைது செய்வதா?இல்லையா? என நீதிமன்றம் முடிவுஎடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியினை சோதனை செய்த போது அதில்கையடக்கத் தொலைபேசி ஒன்று…

Read More

மின்சார நெருக்கடியை ஏற்படுத்த சிலர் முயற்சி

திட்டமிட்டு நீர் மட்டத்தைக் குறைத்து நீர்மின் உற்பத்தியில் நெருக்கடி நிலையை ஏற்படுத்த மின்சார சபையில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் மின்சார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். மின்சாரக் கட்டமைப்பில் சமநிலையைக் குழப்பி மின் நெருக்கடியை தோற்றுவிக்க மின்சார சபையில் உள்ள சிலர்…

Read More

இலங்கை தலைவர்கள், பிடல் கெஸ்ரோவின் வழியை பின்பற்றுகின்றனர்- அமைச்சர் சம்பிக்க

ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கியூபாவின் தலைவர் பிடல் கெஸ்ரோ பின்பற்றும் வெளிநாட்டு கொள்கைகளையே பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர அபிவிருத்தித்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்தை கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே கெஸ்ட்ரோ, அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவை. ஏதிர்வரும் ஜூன் மாதம் தமது நாட்;டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்று ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை கொண்டிருந்த ஈரான், ஆர்ஜன்டீனா மற்றும் பிரேசில்…

Read More

கொழும்பில் 900 ஏக்கரில் 68.000 சட்டவிரோத குடியிருப்புக்கள்

– ஷம்ஸ் பாஹிம் – கொழும்பு மாவட்டத்தில் 900 ஏக்கர் நிலப்பரப்பில் 68 ஆயிரம் குடும்பங்கள் சட்டவிரோதமாக குடியிருப்பதாக அடையாளங்காணப்பட்டுள்ளது. இவர்களை வேறு இடங்களில் குடியேற்ற வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டிருப்பதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பு தொட்டலங்க பேர்கியூசன் தோட்டத்திலுள்ளவர்களுக்கு ஜனவரி 12 ஆம் திகதி வேறு இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன.எனினும் அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு ஜனவரி 31 வரை காலக்ெகடு விதிக்கப்பட்டிருந்த நிலையிலே சிலர் குழப்பம் ஏற்படுத்தும்…

Read More