Headlines

உடுவே தம்மாலோக்கதேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு

உடுவே தம்மாலோக்கதேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கு முன்னதாக அவரிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கான போதியளவு ஆதாரங்கள் காணப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

“அடுத்த சில வாரங்களில், ஆச்சரியப்படும் தீர்மானங்கள்” – முக்கியஸ்தர்கள் கைதாகும் வாய்ப்பு

புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் மக்கள் ஆச்சரியப்படும் தீர்மானங்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்படலாம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை ஊழல், மோசடிகள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளதுடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் நியமிக்கப்படாமல் இருந்ததால், விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. புதிய சட்டமா…

Read More

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது

அரசியலமைப்பு சபை இன்று (10) பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட மூன்று பெயர்கள் தொடர்பிலலேயே இன்று கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார். அதன் பின்னர் அரசியலமைப்பு சபை அங்கத்தவர்களின் இணக்கத்துடன் சட்டமா அதிபர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More