Headlines

மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

இலங்கையில் பதிவான மிகப் பெரிய இலஞ்ச தொகையாக கருதப்படும்  12.5 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற சுங்க அதிகாரிகள் விவகாரத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு இவர்களை இன்று (25) கைது செய்தது. சுங்க அத்தியட்சர்களான வசந்த விமலவீர மற்றும் உபாலி செனரத் விக்ரமசிங்க ஆகியோரே இவ்வாறு கைதுச் செய்யப்பட்டதக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்…

Read More

பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

நாரஹேன்பிட பகுதியில் இருந்து பெருந்தொகையான மதுபான போத்தல்களை கலால் சுற்றிவளைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது, கைப்பற்றியுள்ளனர். இதன்படி 60 இலட்சம் ரூபா பெறுமதியான 800 மதுபான போத்தல்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று (17) மாலை, குறித்த பகுதியில் இருந்த வீடொன்று மற்றும் அதன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் மதுபான போத்தல்கள் இருந்துள்ளன. மேலும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த…

Read More

மஹிந்தவையும் ஷிராந்தியையும் கைது செய்ய வேண்டும்

சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வனம் அர­சு­டை­மை­யாக்­கப்­ப­ட ­வேண்டும். யோஷி­தவை கைது­செய்­வ­தற்கு முன் அவ­ருக்கு வழி­ காட்­டிய மஹிந்த ராஜ­பக்ஷ ­வையும் ஷிராந்­தி­யை­யுமே கைது­செய்­தி­ருக்க வேண்டும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணி யின் தலை­வரும் மத்­திய மாகா­ண­சபை உறு ப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார். கொழும்பில் மீண்டும் போதைப் பொருள் வியா­பா­ரிகள் மற்றும் பாதாள உலகக் கோஷ்­டி­யினர் தலை­தூக்க பொலிஸார் இட­ம­ளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். அதி­கா­ரத்­ததை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து…

Read More

சிசிலியாவை 23ஆம் திகதி ஆஜர்படுத்த உத்தரவு

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட வைப்பீட்டாளர்களின் பணத்தில் 720 கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவத்தின் ஆறாவது சந்தேகநபரான சிசிலியாவுக்கு 91 குற்றச்சாட்டுகளின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெள்ளவத்தைப் பிரதேசத்தில் ஹெரோயினுடன் இருவர் கைது

வெள்ளவத்தைப் பிரதேசத்தில்  இன்று(15) அதிகாலை ஹெரோயினுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதி ஒன்றில் வைத்தே இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து 14 கிராம்100 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் போதை விற்பனை மூலம் பெறப்பட்டதாகக் கருதப்படும் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 200 ரூபாயையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான பெண்ணும், 24 வயதான இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார்…

Read More

நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைது

நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர் செய்துள்ளனர். இன்று (10) காலை அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளனர். கட்டுநாயக்க புலனாய்வுப் பிரிவினர் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

யோஷிதவின் முன்னாள் காதலி புறக்கோட்டையில்!

கைது செய்யப்படுவார் என பரவலாக நேற்றைய தினம் ஊடகங்களில் பேசப்பட்ட யசாரா வெளிநாடு சென்றிருப்பதாக வெளியாகிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை யசாராவே தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுத்துவரும் நிலையிலேயே அவர் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த விசாரணைகளில் கடந்த வாரம் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் ஐவர் கைது…

Read More

லலித் கொத்தலாவலயின் மனைவிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சிசிலியா கொத்தலாவல கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செலின்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லண்டனிலிருந்து டுபாய் ஊடாக…

Read More

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு : ஐவர் கைது

– க.கிஷாந்தன் – பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று (25) இரவு வேளையில் ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பகுதியில் இவர்கள் பல நாட்களாக இவ்வாறு சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டு…

Read More

சூதாட்ட நிலையம் முற்றுகை; 8 பேர் கைது

கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வீடொன்றில் இயங்கி வந்த சூதாட்ட நிலையம் ஒன்று பொலி­ஸா­ரினால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுள்­ளது. கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட போத்­த­லே­கம பிர­தேச வீடொன்றில் மிகவும் இர­க­சி­ய­மான முறையில் நடத்திச் செல்­லப்­பட்ட சூதாட்ட நிலை­யமே இவ்­வாறு பொலி­ஸாரின் முற்­று­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­ந­ட­வ­டிக்­கையின் போது அவ்­வீட்டில் சூதாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த எட்டுப் பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இவர்கள் நீண்ட நாட்­க­ளாக இவ்­வாறு இந்த சட்­ட­வி­ரோத செயலில் ஈடு­பட்டு வந்­தி­ருப்­ப­தா­கவும், வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­களும் இங்கு சூதாட்­டத்தில் ஈடு­ப­டு­வ­தா­கவும் அவர்­க­ளிடம் மேற்­கொண்ட…

Read More

போதையில் வாகனம் செலுத்திய புதுமைப் பெண்கள்

மது போதையில் மோட்டார் சைக்கிளை வீதி முழுவதும் அங்கும் இங்குமாக செலுத்தி வந்த இரு இளம் பெண்கள் களுத்துறை, வடியமண்கட சந்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு அங்கு மது அருந்திவிட்டு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்தப் பெண்கள் பாணந்துறையிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் எனவும் வாதுவை நகரில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெண், கடும் போதையில் நிற்க முடியாது…

Read More

போலி அறிக்கையைத் தயாரித்த அதிகாரி கைது

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற பெண் ஒருவருக்கு போலி குடும்பப் பின்னணி அறிக்கையைத் தயாரித்து வழங்கிய அபிவிருத்தி அதிகாரி, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை பிரிவினரால் குறித்த அதிகாரி  கைது செய்யப்பட்டுள்ளார். ரம்பேவ பிரதேச செயலாளர் காரியாலயத்தில் சேவையாற்றும் அபிவிருத்தி அதிகாரியே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மூன்று வயதுடைய குழந்தை ஒன்றின் தயாருக்கு போலியான குடும்பப் பின்னணி அறிக்கையை தயாரித்து, அவரை கடந்த வருடம் ஜூன்…

Read More