Headlines

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் வாசுதேவ பங்கேற்க மாட்டார்!

கூட்டு எதிர்க்கட்சியினால் கிருலப்பயில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பங்கேற்க மாட்டார். கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது அதனை தந்திரமாக தவிர்க்க சில கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் இவ்வாறு மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது தந்திரமாக அதனை தவிர்க்கத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, வாசுதேவ நாணயக்கார ஏற்கனவே கியூபா நோக்கிப்…

Read More

ஜெனீவா செல்லும் கூட்டு எதிர்க்கட்சி

– லியோ நிரோஷ தர்ஷன் – நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில்  முறைப்பாடு செய்யவே கூட்டு எதிர்க்கட்சி ஜெனீவா செல்லவுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் உதயகம்பில ஆகியோர் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஜெனீவா பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

“கூட்டு எதிர்க்கட்சியில் பங்கேற்க SLFP க்கு அனுமதி கிடையாது”

கூட்டு எதிர்க்டக்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அனுமதி கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் 17ம் திகதி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றையும் கூட்டமொன்றையும் நடாத்த உள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே துமிந்த திஸ்ஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த கூட்டத்திலும்…

Read More

கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும்! பிரதமர்

கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (10) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் இது குறித்து கலந்தாலோசித்து, அடுத்த நாடாளுமன்றத் கூட்டத் தொடரின் போது தீர்வு வழங்கப்படும். கூட்டு எதிர்க்கட்சியினரின் கோரிக்கை குறித்து சபாநயாகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்…

Read More