Headlines

தேர்தலுக்கு அரசாங்கம் பயப்படுகிறதாம்- டலஸ் கண்டுபிடிப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் தள்ளிப் போட்டு வருவதற்குக் காரணம் தேர்தலை முகம் கொடுக்கவிருக்கும் பயத்தினாலேயே ஆகும் என கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். தொகுதி நிர்ணயம் செய்வதற்கு எடுக்கும் தாமதமே இதற்குக் காரணம் என அரசாங்கம் சாட்டுப் போக்குத் தெரிவித்து வருகின்றது. அப்படியானால், அரசாங்கம் ஏன் தொகுதி நிர்ணயம் செய்வதற்கு முன்னர் உள்ளுராட்சி சபைகளைக் கலைத்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Read More

இன்று மஹிந்த புதிய அலுவலகம் ஆரம்பிக்கிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று (12) ஆரம்பிக்கப்படவிருக்கிறது. பத்தரமுல்லை, ஜயந்திபுர, நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்படவுள்ள இந்த நிகழ்வில்  கூட்டு எதிக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read More