“குப்பைகளை புத்தளத்தில் கொட்ட அனுமதிக்கமாட்டோம்”
கொழும்பை அழகுபடுத்தும் நோக்கில் அங்குள்ள குப்பைகளை ரயில் மூலம் எடுத்து வந்து புத்தளத்தில் கொட்டுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார். வடமேல் மாகாண சபையின் மாதாந்த அமர்வு அண்மையில் இடம்பெற்ற போது தனிநபர் பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த போது 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பிலுள்ள குப்பைகளை பிரத்தியேகமாக ரயில் மூலம்…
