Headlines

இணக்கசபை வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, 13 மாவட்டங்களில் இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதன்படி  கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், பதுளை, கண்டி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன் இணக்க சபைகளை வலுவூட்டுவதன் ஊடாக பிரதேச மட்டத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீதி…

Read More

ரயில் மோதி ஒருவர் பலி

கம்பஹா ரயில் கடவையில், கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பெம்முல்ல ரயில் பாதையின் மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது. பெம்முல்ல ரயில் கடவையில் காவலாளியாக கடமையாற்றிய அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே ரயில் மோதுண்டு  உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது

Read More

சேயா வழக்கு: 25 முதல் தொடர் விசாரணை

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில் ஐந்துவயது சிறுமியான சேயா சந்தவமி பக்மீதெனிய படுகொலை தொடர்பான வழக்கை ஜனவரி 25ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷம்பா ஜனாகி ராஜரத்ன உத்தரவிட்டார். இந்த வழக்கு, சமத் ஜயலனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More